பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து.. 20 மாணவர்கள் பரிதாபமாக பலி.!

கயானாவில் உள்ள பள்ளிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி மற்றும் பலர் காயமடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான கயானாவில், பள்ளி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹ்டியா நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலத்த காயமடைந்த 6 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். மேலும், 5 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை.

சுமார், 800,000 மக்கள் வசிக்கும் சிறிய ஆங்கிலம் பேசும் நாடான கயானா, உலகின் மிகப்பெரிய தனிநபர் எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட முன்னாள் டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனியாகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.