டெல்லி உத்தரப்பிரதேசம் செல்லும் சாலையில் பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்
இன்று அதிகாலை 3:22 மணி அளவில் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சுக்தேவ் விஹார் எனும் பகுதியில் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள உத்திரபிரதேச சாலை வழியாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பேருந்து செல்லும் வழியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து என்எஸ்சி காவல் நிலையத்திற்கு விபத்து தொடர்பான தகவல் வந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் ஆம்புலன்ஸ் சேவையும் அவ்விடத்தில் நடைபெற்றுள்ளது. காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் விபத்து நடந்ததும் பேருந்தின் ஓட்டுனர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுனரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…