இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள் என எம்.பி. சஞ்சய் ராவத் பதிவிட்டு உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் 40 நாள்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, டெல்லி, உள்பட பல மாநிலங்களில் திறக்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மது பிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், மது வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புகள்இருப்பதாக பல தரப்பிலிருந்தும் கருத்து எழுந்து உள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைனில் மதுபான விற்பனையை நடத்த மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஏனென்றால் ஆன்மா(spirit) உடலை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அங்கு தான் ஆன்மா (spirits) உள்ளன என பதிவிட்டு உள்ளார்.
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…