2 வயது குழந்தையின் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

  • நெல்லை மாவட்டத்தில் 2 வயதுடைய குழந்தை தெருவில் விளையாடிய போது அந்த வழியாக வந்த தனியார் வேன் அந்த குழந்தையின் மீது மோதியதில் சிகிச்சைக்கு சென்ற வழியிலேயே உயிரிழப்பு.
  • இதுதொடர்பாக குழந்ந்தையின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெரிவை சேர்த்தவர் சுரேஷ் என்பவரின் மகன் 2 வயதுடைய மகேஷ் என்ற குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வேன், அந்த குழந்தையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குழந்தையின் தாயார் இசக்கியம்மாள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்ட்டர் ஜீடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இட்டமொழியை சேர்ந்த வேன் டிரைவர் 20 வயதுடைய செல்வின் என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்