குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிங்கம் பகுதியில் நேற்று  இரவு பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு கொலை செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

author avatar
murugan