காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!

காஷ்மீரில் பாண்டிபோராவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரில் உள்ள பாண்டிபோராவின் சும்ப்லர் பகுதியில் உள்ள ஷோக்பாபா காட்டில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன.

பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஒரு லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதி கொல்லப்பட்டார் [என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube