2 மாணவர்கள் யூடியூப்பில் வீடியோ பார்த்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி..!

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் 2 வாலிபர்கள் கதவை பூட்டிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது சிக்னல் மூலமாக மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது.
உடனே மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என தெரியவந்தது. இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் யூடியூப் சேனலில் ஏடிஎம்மை எப்படி கொள்ளை அடிக்கிறது  என வீடியோ பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்று வேறு வங்கி கிளைகளில் எங்கேயாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan