ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மைல்கல்.. 5 ஆண்டுகளில் 2 லட்சம் “கிரெட்டா” கார்கள் ஏற்றுமதி!

இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.

ஹூண்டாய் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தனது “கிரெட்டா” ரக எஸ்யூவி கார்களை இந்தியாவில் வெளியிட்டது. இந்த கார், இந்தியளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்பொழுது கிரெட்டா காரை வெளியிட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்து.

இந்த கிரெட்டா எஸ்யூவி தமிழகத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தநிலையில், இந்தியாவில் அதிக கார்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என ஃபோர்டு நிறுவனம் பெயரெடுத்த நிலையில், தற்பொழுது அதனை ஹூண்டாய் இந்தியா முந்தி, புதிய மைல்கல்லை எட்டியது.

இதுவரை புதிய மற்றும் முந்தைய கிரெட்டா என மொத்தமாக 2,00,000 கிரெட்டா யூனிட்டுகள் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ஹூண்டாய் இந்தியா நிறுவனம், மேட்-இன்-இந்தியா கார்களை ஏற்றுமதி நோக்கில் தீவிரமடைந்துள்ளது.

அதில் முதல்கட்டமாக, சான்ட்ரோ, கிராண்ட் i10, எக்ஸ்சென்ட், கிராண்ட் i10 (நியோஸ்) & கிராண்ட் i10 (ஆரா), எலைட் i20, i20 ஏக்டிவ், அசென்ட் (வெர்னா), வென்யூ மற்றும் கிரெட்டா போன்ற 10 மாடல் கார்களை 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.