அடிபட்ட நல்ல பாம்புக்கு 2 மணிநேரம் அறுவை சிகிக்சை..!

மதுரை திருப்பரம்குன்றம் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு அடிபட்ட நிலையில் நகரமுடியாமல் கிடந்தது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு விரைந்து வந்த ஊர்வனம் அமைப்பு ஊழியர்கள் அந்த நல்ல பாம்பை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பாம்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி கொடுத்தனர்.
பாம்பிற்கு காயம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிக்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.பின்னர் அந்த பாம்பிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 2 மணிநேரம் அறுவை சிகிக்சை செய்தனர்.அறுவை சிகிக்சைக்கு பிறகு பாம்பு இயல்பு நிலைக்கு திரும்பியது.

author avatar
murugan