#BREAKING: +2 தேர்வு ஒத்திவைப்பு..? மாலை அறிவிப்பு..!

12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே-3 ஆம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் மத்தியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதும்போது தொற்று ஏற்படுவதற்கான அபாயகரமான சூழல் ஏற்படும் என்பதால் இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வில் மாற்றம் கொண்டுவருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆன்லைனில்  12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது சாத்தியமா என்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் நடத்த  அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் பிளஸ் டூ தேர்வு  அட்டவணை இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan