+2 பொதுத்தேர்வு.., பெற்றோர், மாணவர்கள் கருத்து தெரிவிக்க மின்னஞ்சல் அறிவிப்பு..!

+2 தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக சிபிஎஸ்சி +2பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்  கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், +2 தேர்வு குறித்த முடிவுகளை பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.  இந்நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு +2 தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan