#BREAKING: +2 தேர்வு தேதியில் மாற்றம்.. தேர்வு இயக்ககம் அறிவிப்பு..!

#BREAKING: +2 தேர்வு தேதியில் மாற்றம்.. தேர்வு இயக்ககம் அறிவிப்பு..!

முதல் மொழிப்பாட தேர்வு மட்டும் 31 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021 ஆம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறுவதால், 03.05.2021 அன்று நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் 31.05.2021 அன்று நடைபெறும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும்.

மேலும் தேர்வுகள் நடைபெறும் பொழுது பின்பற்ற வேண்டிய விரிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube