பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை வைத்து விளையாடிய 2 சிறுவர்கள் காயம் !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிமிஸ் (8) ,சூர்யா (8) சூரிய  இவர்கள் இருவரும் அங்குள்ள ஊருணியில் விளையாடி  கொண்டிருந்தபோது உருண்டையான ஒரு பொருள் இருப்பதை பார்த்து இருவரும் அந்த பொருள் பந்து என நினைத்து தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது.

நல்ல வேலையாக தூக்கி எறிந்தபோது மேலே குண்டு வெடித்ததால் அந்த சிறுவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த  இரண்டு சிறுவர்களையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் தூக்கி விளையாடியது  நாட்டு வெடிகுண்டு என போலீஸ் விசாரணையில் தெரிந்தது. மேலும் அங்கு தொடர்ந்து நடத்திய சோதனையில் ஒரு வெடி குண்டை கண்டுபிடித்தனர். குண்டு வைத்தது யார் ? என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan