அசாமின் தேஜ்பூர் நகரில் இருந்து தென்கிழக்கே 49 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 2.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இது ரிக்டரில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
இப்போது வரை, எந்தவிதமான உயிரிழப்பு மற்றும் சேதமும் ஏற்படவில்லை. இதற்கு முன் கடந்த ஜூன் 21 அன்று, குவாஹாட்டி மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களில் வசிப்பவர்கள் மற்றும் அண்டை மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 5.1 அளவைக் கொண்டிருந்தது, இதன் மையப்பகுதி மிசோரமின் ஐசாவால் மாவட்டமாகும்.