தமிழகம் மற்றும் புதுவையில் மாணவ மாணவிகள் 2-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு..!!
தமிழகம் மற்றும் புதுவையில் மாணவ மாணவிகள் 2-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு..!!
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி, வேலூர் திருப்பத்தூர் கல்லூரி, மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கடலூர், நாகை, நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இவர்களை சமாளிக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.