முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை …!

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை …!

 54 வயதுடைய முன்னாள் டென்னிஸ் வீரரும், மூன்று முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமாகிய போரிஸ் பெக்கர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் சிறந்த டென்னிஸ் வீரராக இருந்து வந்த நிலையில், தனியார் வங்கி ஒன்றில் கோடிக்கணக்காக பணம் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாததால் தான் திவாலானவர் என பெக்கர் அறிவித்திருந்தார்.

ஆனால் போரிஸ் பெக்கர் பொய் சொல்லியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணங்கள் அனைத்தையும் தனது இரண்டாவது மனைவி மற்றும் பிரிந்த முதல் மனைவியின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான விசாரணை லண்டனிலுள்ள சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெக்கர் வேண்டுமென்றே தனது தவறை மறைத்ததாக கூறியுள்ளனர். மேலும் இன்னும் அவர் மற்றவர்களை குறை சொல்வதற்கு வாய்ப்பு தேடுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கில் போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube