2.04 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் அன்பில் மகேஷ்..!

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆசிரியர்களுக்கு இணையதள கணினி வழி அடிப்படை பயிற்சி வகுப்பு 5 நாட்கள் நடத்தப்படுகிறது. 2.04 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெற்று பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

75,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என கூறினார்.

author avatar
murugan