2 மாதத்திற்கு 144 தடை..!வாகனங்களுக்கு தடை…!நள்ளிரவு முதல் அமல்..!!

இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட்து என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்நிலையில் இன்று முதல் செப்.15 வரையும் அக்.20 முதல் 31 வரையும் வாடகை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

 

author avatar
kavitha

Leave a Comment