2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுவித்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
DINASUVADU