நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் காவல்துறையினர் வியாபாரிகளிடம் செல்போன்களை பறித்து கொலை, கொள்ளை குற்றவாளிகளைப்போல நடத்துவது, வியாபாரிகளை ஆபாசமாக திட்டி தாக்குவது போன்றவற்றை கண்டித்து வருகிற 19ம் தேதி தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தர்மர் ராஜா கூறுகையில், தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் அத்துமீறி நடந்து செல்போன்களை பறிப்பது, ஆபாசமாக திட்டி வியாரிகளை தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநில தலைவர் வெள்ளியனிடம் புகார் அளித்தோம்.
அதனடிப்படையில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தூத்துக்குடி போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், வருகிற 19ம் தேதி காவல்துறையினரைக் கண்டித்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிர போரட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதையடுத்து வருகிற 19ம் தேதி தூத்துக்குடியில் முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதற்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஆதரவு அளித்து போராட்டம் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…