தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சட்டப்  பேரவையில் உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்திட கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் சாலைகள் சீர் செய்யப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.