டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் காலை நிலவரப்படி கொரோனா வைரசால் 11088 பேர் பாதிக்கப்பட்டு, 176 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில அரசு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 5898 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் இதுவரை 5567 பேர் குணமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. வீட்டு ஐசோலேஷனில் 2739 பேர் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்