ஆப்கானிஸ்தானில் உள்ள அக்சா மாவட்டத்தில் அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது வழக்கம். இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வடக்கு ஜவ்ஜ்ஜான் மாகாணத்தின் அக்சா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர். அப்பொழுது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த தலிபான் அமைப்பினர் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலிபான் அமைப்பின் தளபதி காரி முபீன் என்பவர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…