#BREAKING: திருச்செந்தூரில் 18, தூத்துக்குடியில் 14 செ.மீ மழை; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்- வானிலை மையம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 08:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை திருச்செந்தூரில் 18 , தூத்துக்குடியில் 14 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. எனவும் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு வகை எச்சரிக்கை தற்போது சிவப்பு வகை எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan