சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவில் ஜியாங்சுவில் இருக்கும் சுஹாவ் நகரில் உள்ள விடுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதனால் விடுதியில் இருந்தவர்கள் 23 பேர் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் இந்த இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.

இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் பலத்த காயத்தால் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.