கோவையில் மழைக் காரணமாக வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு..!

கோவையில் மழைக் காரணமாக வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழப்பு..!

கோவையில் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் உயிர் இறந்துள்ளார்கள்.

கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இதில்  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடுநீர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் வீடுகளியில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது இடிந்ததால் இடிபாட்டில் சிக்கிக்கொண்டு பெண்கள், சிறுமி உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் கிடந்த சடலங்களை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக 17 சடலங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இடிபாடுகளின் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube