தலைநகர் டெல்லியில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தலைநகர் டெல்லியில் மேலும் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,645 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,18,645 ஆக அரிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,994 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,693 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,545 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 17,407  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube