தாய் வெங்காயம் வாங்க சென்ற நேரத்தில் நடந்த கொடூரம்!5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்!

  • தாய் வெங்காயம் வாங்க சென்ற நேரத்தில் 5 வயதுசிறுமியை பத்தாம் வகுப்பு படிக்கும் பதினாறு வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
  • இந்த சம்பவம் திஷா சட்டம் நிறைவேற்றிய பின் நடந்த முதல் பாலியல் ரீதியான குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆந்திராவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வெங்காயம் வாங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமி தாய் வெளியே சென்றதால் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் சிறுமியின் வாயில் துணியை வைத்து பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நடந்த முதல் கைது சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.