ஸ்னாப்சாட் மூலம் அறிமுகம் ஆன நபரால் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

ஸ்னாப்சாட் மூலம் அறிமுகம் ஆன நபரால் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

மத்திய பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்னாப்சாட் மூலம் லால்காட்டி பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்பவருடன் போபாலில் உள்ள 15 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதி அன்று அந்த சிறுமியின் வீட்டிற்கு ஆதித்யா சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது , அந்த சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். இதனால், வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட ஆதித்யா அந்த சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி, ஆரம்பத்தில், யாரிடமும் எதையும் கூறவில்லை. இருப்பினும், ஆதித்யா சமீபத்தில், மீண்டும் சந்திக்கும்படி அந்த சிறுமிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

பின்னர், போலீசாரிடம் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  ஆதித்யா மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube