144 தடை உத்தரவால் தனது திருமணத்தை தள்ளி வாய்த்த சப் கலெக்டர்!

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் மகாசமூத் பகுதியை சேர்ந்தவர் தான் ஷீட்டால் பன்சால் என்னும் இளம்வயது பெண். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ராய்ப்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் ஐ.எப்.எஸ் அதிகாரி ஆயுஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 144 தடை உத்தரவால் தங்களது திருமணத்தை  பன்சால் நிறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்கள் நடத்தலாம் எனக் கூறி இருந்தாலும், 190 நாடுகளில் தற்போது இயல்புநிலை முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் திட்டமிட்டபடி எங்களுடைய திருமணத்தை நடத்தியிருந்தால் தவறான முன்னுதாரணமாக இருந்திருப்போம். எனவே தான் நடத்தவில்லை என கூறியுள்ளார்.

author avatar
Rebekal