நாளை முதல் திருப்பத்தூர் , காளையார்கோவிலில் 144 தடை..!

விடுதலை போரில் உயிர் இறந்த மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில்  நாளை அரசு சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 27-ம் தேதி காளையார் கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் குருபூஜை நடைபெற  நடைபெறவுள்ளது.
இதை தொடர்ந்துவருகிற 31-ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வருகிற 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜெயக்காந்தன் ஆணையிட்டுள்ளார்.

author avatar
murugan