144தடை உத்தரவு நெல்லையில் ரத்து!மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு …

கடந்த மார்ச் 19 ஆம் தேதி  விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவை  நெல்லை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம்  ரத யாத்திரைக்காக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலை 6மணி முதல் தளர்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment