பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 14,237 பேருந்துகள் இயக்கப்படும்…!அமைச்சர் விஜயபாஸ்கர்

பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 14,237 பேருந்துகள் இயக்கப்படும்  என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 14,237 பேருந்துகள் இயக்கப்படும்.கோயம்பேட்டிலிருந்து புறப்படும் பேருந்துகள் பெருங்களத்தூர் செல்லாமல் ஊரப்பாக்கம் வழியாக செல்லும்.

கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர் ஆகிய பகுதியிலிருந்து பேருந்து இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment