ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள் – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.424 கோடியில், ஈரோடு மாநகராட்சி மற்றும் கரூர், கடலூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது. திருமங்கலம் நகராட்சியில் DBFOT அடிப்படையில் பொதுத் தனியார் பங்கேற்பு முறையில் (PPP) புதிய பேருந்து நிலையம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்