பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து 6 ஆண்களால் கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுவன்!

6 ஆண்களால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டு, பல மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கீதா களனி எனும் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக 6 ஆண்களால் 13 வயது சிறுவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டு, பாலியல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு துன்புறுத்தப்பட்டுள்ளான். அவர்களின் துன்புறுத்தலால் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுமியாக மாறிய அந்த 13 வயது சிறுவனை அந்த 6 நபர்களும் கடந்த பல மாதங்களாக கற்பழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது அந்த பாதிக்கப்பட்ட சிறுவன் டெல்லி பெண்கள் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறுவனை அவர்கள் கடந்த 3 வருடத்திற்கு முன்பதாக நடன நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து அதன் பிறப்பதாக தான் இவ்வாறான காரியங்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

author avatar
Rebekal