கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய 120 வயது மூதாட்டி..!

காஷ்மீரில் தோலி தேவி என்ற 120 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே அனைவரும் ஆதாரமாக கொண்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்தனர். இந்தியாவில் இதுவரை 19,50,04,184 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,30,58,913 ஆக உள்ளது.

இந்நிலையில், 120 வயது மூதாட்டி தோலி தேவி என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள உதம்பூர் மாவட்டத்தின் கட்டியாஸ் கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா தடுப்பூசி செலுத்திய மூதாட்டி தோலி தேவி கூறுகையில், இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி. அதன் காரணத்தினால் தான் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

அதனால் நீங்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். நானே பயமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது உங்களுக்கு என்ன..? இந்த தடுப்பூசியால் நான் எந்தவொரு பக்கவிளைவையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். பாட்டியின் விழிப்புணர்வை கண்டு பலரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

8 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

11 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

11 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago