பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 12 பேர் கைது..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை ரிங் ரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் 25 வயது மதிப்புத்தக்க சட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் அந்த மாணவியை மிரட்டி கடத்தி சென்று உள்ளார்.
அந்த மர்ம கும்பல் அருகிலுள்ள செங்கல் சூளையில் அந்த மாணவியை கடத்தி சென்று 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து  கொலை செய்து உள்ளார். கான்கே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்து உள்ளார். பின்னர் அவரின் புகாரின் ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து நேற்று சங்கிரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரிஷாப் குமார் ஜா அவர்கள் கூறுகையில் , கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் , கைத்துப்பாக்கிகள், எட்டு செல்போன் மற்றும் கொலை செய்யப்பட்டபெண்ணின் செல்போன் ஆகியவற்றை அவர்களிடம்  கைப்பற்றியதாகவும் , அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
 
 

author avatar
murugan