மேற்கு ஆப்கானிஷ்தானில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் 12 பேர் பலி……

மேற்கு ஆப்கானிஷ்தானில் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பேர் பலி! பெண்கள் உட்பட குழந்தைகள் உயிரிழப்பு….

மேற்கு ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், ஆப்காணிஸ்தான் மேற்கு மாகாணமான ஹெராட்டின் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதில் குறைந்தது 12 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹெராத் மாகாணத்தில் அட்ராஸ்கான் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெறிவிக்கப்பட்டிருந்தது, இதன்மூலம் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அறியப்பட்டது, மேலும் அங்கு உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகள் மற்றும் பழத்தோட்டங்கள் வெள்ள நீரால் அழிக்கப்பட்டுள்ளது,வெள்ளத்தால் மாவட்ட சாலைகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி மூடப்பட்டுள்ளது, இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக்குழு வந்துள்ளதாகவும்,அங்கே சிக்கியிருக்கும்  குடும்பங்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக மேற்கு ஆப்கானிஷ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக்கு கொண்டிருக்கிறது.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

8 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

9 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

11 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

12 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

12 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

12 hours ago