எடப்பாடி அணியில் எங்கள் ஆதரவு 12 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்: தினகரன் ‘பரபரப்பு’

திருச்சி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் எங்கள் ஆதரவு 12 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என தினகரன் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று இரவு செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றாமல் போனதால் 19 எம்.எல்.ஏக்கள் நீக்கம் என்கிற ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. சபாநாயகர் தனபாலிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளனர். நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
இன்னும் எங்களது 12 எம்.எல்.ஏக்கள் அங்கே அமைதியாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது உண்மை என்னவென்று தெரியும்.
என்றைக்கும் பொறுமையும் நிதானமும் தோற்றதாக வரலாறு இல்லை. 1987-ம் ஆண்டு வரலாறு திரும்புகிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment