10ஆம் வகுப்பு தேர்வெழுதிய சிறை கைதிகள்.! ரிசல்ட் என்னாச்சி.?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 264 சிறைக்கைதிகள் தேர்வெழுதியதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள்  எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களை போல, தமிழகத்தில் சிறை தண்டனை பெற்றுவரும் சிறைக்கைதிகளும் படிப்பின் மகத்துவம் அறிந்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வெழுதிய 264 சிறைக்கைதிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.