சிறுமி எரித்து கொன்ற வழக்கு: 11 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது- ஐஜி ஜெயராம்!

திருச்சியில் 14 வயது சிறுமி ஏரித்து கொலை செய்த வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது என திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறதாக தெரிவித்தார்.

மேலும், சிறுமி எரிந்த நிலையில் கிடந்த இடத்தை காட்டிய 2 பேரிடம் சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.