தமிழகத்தில் 6 மணி நேரத்தில் 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி! – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும், மதியம் 1 மணி நிலவரப்படி 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல் அளித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல் அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.