11 உயிரிழப்பு: விபத்துகள் அதிமுக ஆட்சியில் சாதாரணமாகி விட்டது – முக ஸ்டாலின்

11 உயிரிழப்பு: விபத்துகள் அதிமுக ஆட்சியில் சாதாரணமாகி விட்டது – முக ஸ்டாலின்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு அலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதுபோன்று பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனிடையே, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முக ஸ்டாலினும் தற்போது இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் பதிவில், சாத்தூர் – அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற விபத்துகள் அதிமுக ஆட்சியில் சாதாரணமாகி விட்டது. உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube