இனவெறி சர்ச்சையால் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.
சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து 3ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின், ரஹானே, அஷ்வின், நடுவர்களாக இருந்த பால் ரீஃபல், பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டது.
இதனை அறிந்த பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தது. இந்த நிலையில் இன்று 3வது டெஸ்ட் போட்டியில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி பந்துவீசி கொண்டிருக்குபோது, சில ரசிகர்கள் மீண்டும் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்திய வீரர் முகமது சிராஜ் திடீரென பந்துவீச்சை நிறுத்தினார்.
இதன் காரணமாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் ஆட்டம் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழந்து 312 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இரண்டு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து, புஜாரா மற்றும் கேப்டன் அஜின்கியா ரஹானே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…