ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..!

ஆந்திர மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த வருடம் கல்வியை ஆன்லைன் வழியாக நடத்தினர். தமிழகம் மற்றும் பல இடங்களில் 12 ஆம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள்  12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து கலந்தாலோசித்து வருகின்றனர்.

இருந்தபோதிலும் ஆந்திர பிரதேசம் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வை ரத்து செய்யவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு குறித்து ஜூலை மாதம் ஆலோசனை செய்யப்படும் என்றும் அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.