Categories: Uncategory

டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 10 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கும்  மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சேலம் மாவட்டம் அழகம்  பாளையம்ப்புதூரில் திமுக நிர்வாகியின் மகன் இன்பரட்சகன் டெங்கு காய்ச்சலால் உயிரலந்தான். விருதுநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டிருத்த லலிதா  என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லலிதா உயிர்பிரிந்தது.

நெல்லையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வியாபாரி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தைச்  சேர்ந்த மரவியாபாரியான ராஜாமணி என்பவர்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் தனியார்  மருத்துவமனையில் உயிரிழந்தார். பழநி சாமிநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8ம் வகுப்பு மாணவி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். புத்தூரைச் சேர்ந்த செல்வகுமார்  என்பவரின் மகள் கெத்தியா(14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை பாஸ்டின் நகரைச் சேர்ந்த அண்ணா மெயின் வீதியைச் சேர்ந்த கார்த்திக்   என்பவரின் 10 வயது மகன் கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த ராஜாமண சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலூர் அரசு  மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த திருவாளி என்பவரும் உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே கணபதி பாளையத்தை சேர்ந்த சிறுவன் சபரிநாதன் காய்ச்சலால் உயிரிழந்தார்.  மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த தேவி என்பவர் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். தஞ்சை திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் எனும் விவசாயி மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்,
இதனால் சிறந்த மருத்துவ வசதி வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுரிதிவருகின்றன.

Dinasuvadu desk
Tags: health

Recent Posts

தள்ளிப்போகும் பிரஸ் மீட்.! துல்லியமான தேர்தல் நிலவரம் எப்போது தெரியுமோ.?

Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…

4 mins ago

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

30 mins ago

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…

49 mins ago

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

56 mins ago

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…

57 mins ago

உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…

1 hour ago