குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – தமிழக அரசு தீவிர ஆலோசனை

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை

திமுக அரசு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் பல வாக்குறுதிகள் நிலைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும், முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவ துணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment