பத்து ஆண்டுகள் அதிமுக கட்சி ஆண்டிருக்கிறது, முதல் 5 ஆண்டுக்கு -100 மதிப்பெண் போட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.
இதுகுறித்து காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம், தமிழக அரசியலில் இப்ப இருக்கின்ற ஆளும் கட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்குவீங்க என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுகள் அதிமுக கட்சி தமிழகத்தை ஆண்டிருக்கிறது, அதில் முதல் 5 ஆண்டுகளுக்கு -100 மதிப்பெண் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த முதல் 5 ஆண்டுகளில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு மார்க் போட முடியாது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். அந்த -100 மதிப்பெண்ணை எடுத்து இவர்களுக்கு போடுங்கள் என்றும் நான்கு வருடம் 9 மாதம் முதல்வர் பழனிசாமி எங்கே இருந்தார் என்றே தெரியாது எனவும் கூறியுள்ளார். 3 மாதத்தில் சுறுசுறுப்பாக வந்து ஊர் ஊராக சென்று, இந்த திட்டத்தை அறிவிக்கிறேன், அந்த திட்டத்தை அறிவிக்கிறேன் என்றால், மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு ரூபாய் கூட ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமில்லை, ஒதுக்கவும் மாட்டார்கள் என குற்றசாட்டியுள்ளார். ஏனென்றால், வரைவு திட்டமே கிடையாது. வரைவு திட்டம் தயாரித்து, அதனை ஆய்வு செய்து, அமைச்சரவை ஏற்றுக்கொண்ட பிறகு நிதியமைச்சர் தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு 15 நாட்கள் முன்பு அறிவிப்பு என்பது மல்லிகை, கனகாபரம் பூ மத்தாப்பு மாதிரித்தான் அந்த அறிவிப்பும் என தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னாள் வரும் அறிவிப்புகள் அனைத்தும் மத்தாப்புதான் என்றும் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றால் செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெற்றியை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 1 ரூபாய் ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளதா?என்று கேள்வி எழுப்பி, தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…