இந்தியாவில் பசி பட்டினி பிரச்சனையால் அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பசியால் வாடும் மக்களைப் பற்றிய குறியீடு அளவில் (Global hunger index) இந்தியா, 119 நாடுகளில் 100 வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அண்டை நாடுகளான பங்களாதேஷ், மியான்மர், இலங்கையை எல்லாம் விஞ்சி விட்டது.பட்டினியால் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.