10 ஆண்டு கால காத்திருப்பு.. தந்தையாகிறார் ராம் சரண்.! கொண்டாட்டத்தில் தாத்தா சிரஞ்சீவி.!

சிறுத்தை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மஹதீரா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராம் சரண். இந்த படத்தின் மூலம் ராம் சரண் பாண் இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் ஆவார்.

chiranjeevi and ram charan
chiranjeevi and ram charan Image Source Google

நடிகர் ராம் சரண் முன்னணி நடிகராக வளம் வந்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே உபாசனா காமினேனி என்பவரை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்கள் திருமணமாகி 10 -ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை வரவேற்கவுள்ளனர்.

ram saran and upasana
ram saran and upasana Image Source Google
இதையும் படியுங்களேன்- எனக்கு வரலட்சுமிக்கு காதலா..? முதல் முறையாக மனம் திறந்த விஷால்.!

அதன்படி, ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த சந்தோஷமான செய்தியை நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ram sran and upsama
ram sran and upsama Image Source Google

மேலும் நடிகர் ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “RC15” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment